2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 11 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் இன்று (11) ஆரம்பமாகியது.

கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரத்தில் அமைந்துள்ள  கூம்பு வடிவிலான சிவனொளிபாதமலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித பொருட்கள், நல்லதண்ணி பாதை வழியாக நேற்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

யாத்திரிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஹட்டன் - நல்லதண்ணீர் நகரங்களுக்கு இடையிலான விசேட பஸ் சேவைகள் ஹட்டன் டிப்போவினால்நடத்தப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X