Simrith / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் உத்தியோபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் புறப்பட்டு, 24 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார், வெளியுறவுக் கொள்கை உட்பட தனது அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவார். அமர்வுகளின் போது அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நியூயோர்க்கிலிருந்து, ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 27 அன்று ஜப்பானின் ஒசாகாவிற்கு எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும், இலங்கை தினத்தில் பங்கேற்கவும் பயணம் செய்வார், அங்கு நாட்டின் கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவார்.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ பயணம் செப்டம்பர் 28 ஆம் திகதி தொடங்கும்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago