2025 மே 07, புதன்கிழமை

நாட்டில் மேலும் 246 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொட தொழிற்சாலையின் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேர்ந்து  569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 979ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3259 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 707 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X