2025 மே 08, வியாழக்கிழமை

மட்டக்குளி விபத்தில் 2 பேர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (2) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆட்டோவொன்றில் பயணித்த இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளதுடன் மற்றுமொரு ஆட்டோவில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும் ஓட்டோக்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X