Freelancer / 2022 பெப்ரவரி 06 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார்.
பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளை நாளை (07) சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் அமைச்சர் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .