Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 30, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 மே 15 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட வேண்டும் எனக் கோரியும் தொழிலாளர்களது சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரியும் கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று(15) ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் காலை 10.00 மணிக்கு ஹட்டன் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் கிளை காரியாலயத்தில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்குமுகமாக இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
1 hours ago
3 hours ago