2025 மே 21, புதன்கிழமை

கட்டுநாயக்கா விபத்தில்…

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில்  கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதிக்குப் பிரவேசிக்கும் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்துடன், மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

டிரேன் கனரக வாகனத்தின் முன் டயர்களில்  ஒன்று வெடித்தன் காரணமாக, சாரதிக்கு வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதல், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த டிரேன் கனரக வாகனம், வீதியோரத்தில் இருந்த  மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த  மின்சாரத் தூணில் மோதியதில், மின்சாரத் தூண், லொறியில் உடைந்து விழுந்துள்ளதுடன், மின்மாற்றி வாகனத்தின் பின்பக்கமும் விழுந்துள்ளது.

வாகனத்தின் பின்பக்கமிரந்து பயணித்து மூவரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர். வாகனத்தில் முன்னால் பயணித்த மூவர், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X