2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கண் பிரிவின் நான்கு மாடி கட்டிடத்தொகுதி திறப்பு

Mayu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கில் சப்ரகமுவ மாகாண சபை மற்றும் உலக வங்கியின் நிதி ஒதுக்கிட்டில் ரூ.176.5  மில்லியன் செலவில் சுகாதார மேம்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்ட ரம்புக்கனை பிராந்திய வைத்தியசாலையின் கண் பிரிவின் புதிய நான்கு மாடி கட்டிடத்தொகுதி நேற்றையதினம் (09) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலையில் 3 அறுவை சிகிச்சை பிரிவுகளும் மற்றும் ஒரே தடவையில் 64 நோயாளர்கள் தங்கிருந்து சிகிச்சை பெறும் வகையில் அனைத்து வசதிகள் உட்பட இரண்டு வார்ட்டுத் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

சிவா ஸ்ரீதரராவ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .