2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சுடரேற்றி அஞ்சலி...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு இன்று திங்கட்கிழமை (14) அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட நடைப் பயணத்தில் கலந்துகொண்டவர்கள் இவ்வாறு அஞ்சலி செலுத்தினர்.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நடைப் பயணத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எஸ்.சதீஸ், காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .