Mayu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையை அண்மித்த பகுதியில் புதன்கிழமை (14) அதிகாலை வீசிய சுழல் காற்றினால் கடற்கரையிலுள்ள மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதற்கமைய, காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையோரம் சவுக்கு மரம் மற்றும் மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளதுடன் மின் வயர்களும் அறுந்துள்ளன.
குறித்த பகுதியில் மின் துண்டிக்கப்பட்ட நிலையில் இலங்கை மின்சார சபை காத்தான்குடி அலுவலக ஊழியர்கள் ஸ்தளத்துக்கு விரைந்து மின் இணைப்பை சீர் செய்து மின் இணைப்பை வழங்கியுள்ளனர்.



3 hours ago
21 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Feb 2026