Editorial / 2024 மே 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பேட்
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இரங்கல் திருப்பலி தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் சனிக்கிழமை (18) ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு,இறந்த உறவுகளுக்காக மலர் அஞ்சலியும் இடம் பெற்றது.
இரங்கல் திப்பலியைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது தென் பகுதியில் இருந்து தலைமன்னாரபகுதிக்குச் சுற்றுலா வந்த
பெரும்பான்மையின மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்துத் தெளிவு படுத்த பட்ட நிலையில் அவர்களும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியைப் பெற்றுக்கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இரங்கல் திருப்பலி மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வை ஆலய அருட்பணி பேரவை,மற்றும் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
6) ரொசேரியன் லெம்பேட்







அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .