2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

பாலம் கையளிப்பு…

Editorial   / 2024 மார்ச் 26 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால்  திறந்து வைக்கப்பட்டது.

50 மில்லியன் ரூபாய் செலவில் வெருகல் -கட்டையாறுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

வெருகல் கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த சுமார் 1,500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், பிரதம பணிப்பாளர், வெருகல் பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அப்துல்சலாம் யாசீம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X