2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொருள்களை சுமந்தபடி…

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கைச் சுமை மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று (31) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மண்ணெண்ணை, பெற்றோல், சமையல் எரிவாயு, பானைகள், மின்சார உபகரணங்கள்  மற்றும் சமையலறை உபகரணங்கள் போன்றவற்றை சுமந்து வந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சுமைகளை வெளிப்படுத்தும் பதாதைகளையும் ஏந்தியவாறும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில், ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தன.

(படங்கள் - க.அகரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .