Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 30, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 மே 13 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணரவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒருவருடமாகின்ற நிலையில், முதலாம் ஆண்டு நினைவு தினமும் பிரார்த்தனையும் இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம், ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இதேவேளை ஆதிவிநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இவ் வழிபாடுகளில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஜெயந்திநாதன் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
1 hours ago
3 hours ago