2025 மே 30, வெள்ளிக்கிழமை

வெள்ளை வான் வேண்டாம்...

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வெள்ளை வான்களில் கடத்தப்படுவதை எதிர்ப்போம். அந்தக் காலாசாரத்தை நிறுத்துவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில், காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் அமைப்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. 

கிளிநொச்சி, அம்பாறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில், மிக அண்மையகாலத்தில் இடம்பெற்ற கடத்தல்களைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில்,  ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்குச் சென்று மனுவொன்றைக் கையளித்ததாகவும் அவர்கள் கூறினர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X