2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

2018 WT20இல் மேலதிக 2 அணிகள்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 29 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில், இரண்டு அணிகளுக்கு மேலதிக இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகுதிகாண் சுற்றில் மேலுமிரு அணிகளுக்கும் இடம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இவ்வாண்டு இடம்பெற்ற இடம்பெற்ற தொடரில், தகுதிகாண் சுற்றில் 6 அணிகள் பங்குபற்றியதோடு, அச்சுற்றிலிருந்து 2 அணிகள் பிரதான சுற்றுக்குத் தெரிவாகி, மொத்தமாக 10 அணிகள், பிரதான சுற்றில் விளையாடியிருந்தன.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி, பிரதான சுற்றில் 12 அணிகள் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிகாண் சுற்றில், மேலுமிரு அணிகளைச் சேர்த்து, 8 அணிகள் விளையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அது பிழைத்தால், 6 அணிகளிலிருந்து 4 அணிகள் தெரிவாகக்கூடிய நிலைமை ஏற்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .