Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
திலகரட்ண டில்ஷானின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியாக அமைந்த, தம்புள்ளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டியில், அளவுக்கதிகமான இரசிகர்கள் மைதானத்துக்குச் சென்றமையாலேயே, வசதிக்குறைவு ஏற்பட்டது என, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்தது.
இந்த மைதானத்தில், 18,000 பேரே அமர முடியுமென்ற போதிலும், அப்போட்டியைப் பார்வையிடுவதற்காக 45,000 இரசிகர்கள் சென்றிருந்ததாக, இலங்கை கிரிக்கெட் சபையின் பாதுகாப்புப் பிரிவு கணித்துள்ளது. இவ்வாறு அதிகமான இரசிகர்கள் சென்றமையின் காரணமாக, இரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதோடு, நுழைவுச்சீட்டுகளைப் பெற்றவர்கள், தங்களுக்குரிய இருக்கைகளில் அமர முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்நிலைமைக்காக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
21 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
45 minute ago