2025 மே 21, புதன்கிழமை

Pandora Papers: முறைகேடான நிதி முதலீடுகளில் சச்சின்

Editorial   / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2015 ஆம் ஆண்டு, முறைகேடான நிதி முதலீடுகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்கள் (panama papers) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். அந்த வகையில் தற்போது பண்டோரா ஆவணங்கள் என்பாடும் பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) ஆவணங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 உலக அளவில் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கி குவித்துள்ள பிரபலங்கள் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) உட்பட பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists -ICIJ) இந்த பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களிடம் இருந்து கசிந்த 11.9 மில்லியன் ரகசிய ஆவணங்களை 600க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முறைகேடான வகையில் சொத்துக்களை குவித்துள்ளது தெரிய வந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்து சொத்துக்களை வாங்கி குவித்துள்ளவர்கள் பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar), ரிலையன்ஸ் ADAG தலைவர் அனில் அம்பானி (Anil Ambani)மற்றும் பயோகான் (Biocon)நிறுவனத்தின் தலைவர் கிரண் மசும்தார் ஷா (Kiran Mazumdar Shaw) ஆகியோர் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X