Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டிக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதிபெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிரிட்னி கூப்பர் 61 (48), ஸ்டபானி டெய்லர் 25 (26), டேன்ட்ரா டொட்டின் 20 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சோபி டெவின், 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் சாரா மக்லாஷன் 38 (30), அமி சட்டர்வைட் 24 (29), சோபி டெவின் 22 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டபானி டெய்லர், 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, பிரிட்னி கூப்பர் தெரிவானார்.
நியூசிலாந்து ஆண்கள் அணியைப் போலவே பெண்கள் அணியும், குழுநிலையில் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்ற போதிலும், ஆண்களைப் போன்றே, அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி சந்திக்கவுள்ளது.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago