2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆமிருக்கு எதிர்ப்பு: பதவி விலக அஸார் முயற்சி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவர் அஸார் அலி, தனது பதவியிலிருந்து விலகுவதற்காக முன்வைத்த கோரிக்கையை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டமைக்காகத் தடை விதிக்கப்பட்ட மொஹமட் ஆமிர், பாகிஸ்தானின் தேசிய பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டுள்ளமையைடுத்தே, இந்த இராஜினாமா முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, அஸார் அலியும் மொஹமட் ஹபீஸூம் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரின் பேச்சுவார்த்தைகள், எச்சரிக்கைகள் காரணமாக, அதில் கலந்துகொள்ளச் சம்மதித்தனர்.

இந்நிலையிலேயே, அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு, அஸார் அலி முயன்றுள்ளார். தற்போது அது நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு அவர் சம்மதித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் வீரர்களிடத்தில், ஆமிர் தொடர்பில் மறைமுகமான எண்ணங்கள் காணப்படுவதை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளதோடு, பாகிஸ்தான் அணியில் அவர் சேர்க்கப்பட்டால், அணியின் ஒற்றுமை சீர்குலையக்கூடும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .