2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்து எதிர் இந்தியா: முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராட்டம்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 22 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டில் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், லீட்ஸில் வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, அணித்தலைவர் ஷுப்மன் கில்லின் 147, றிஷப் பண்டின் 134, யஷஸ்வி ஜைஸ்வாலின் 101, லோகேஷ் ராகுலின் 42 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 471 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 4, ஜொஷ் டொங்க் 4, பிறைடன் கார்ஸ் மற்றும் ஷொய்ப் பஷிர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் ஒலி போப் 100 ஓட்டங்களுடனும், ஹரி ப்றூக் ஓட்டமெதனையும் பெறாமலும் காணப்படுகின்றனர். முன்னதாக பென் டக்கெட் 62, ஜோ றூட் 28 ஓட்டங்களைப் பெற்றார். வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரிட் பும்ரா வீழ்த்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X