Editorial / 2019 நவம்பர் 20 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையணிக்கு தலைமை தாங்குவதை இலக்கு வைத்துள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான இலங்கையணியின் தலைவர் லசித் மலிங்க, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்கும் என உறுதியாக நம்புகின்றார்.
முன்னதாக, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து ஓய்வுபெறப் போவதாக 36 வயதான லசித் மலிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை, இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை கூறியதாகவும், ஆனால் இலங்கையில் எதுவும் நடக்கலாம் என லசித் மலிங்க கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான தொடரில் இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில், இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக லசித் மலிங்க திரும்பிய நிலையில், அவரின் கீழ் ஒரு போட்டியில் வென்றதோடு, ஒரு போட்டியில் சமநிலை முடிவையும், மற்றைய எட்டுப் போட்டிகளிலும் இலங்கை தோற்றுள்ளது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026