Shanmugan Murugavel / 2016 ஜூன் 29 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகத்திலுள்ள மிகவும் உடலுறுதியான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, தனது உடலுறுதி காரணமாகத் தன்னால் சிறப்பாக விளையாட முடிவதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அந்த மாற்றம் ஏற்பட்டமை தொடர்பான விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அண்மைக்காலமாக சதம் மேல் சதம் குவித்துவரும் விராத் கோலி, உலகில் அதிகம் மதிக்கப்படும் துடுப்பாட்ட வீரராகவும் கருதப்படுகிறார்.
அவரது இந்த நிலைமைக்கு, 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரே தூண்டுகோலாக அமைந்ததாகத் தெரிவித்தார். அந்தத் தொடரில் 15 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர், 28 என்ற சராசரியில் 364 ஓட்டங்களைப் பெற்றார். அவரது அடித்தாடும் வீதம், 111.65 என்றளவில் காணப்பட்டது. அத்தோடு, இரண்டே இரண்டு அரைச்சதங்களை மாத்திரம் பெற்றிருந்தார். அதன் பின்னரே, தனது வாழ்க்கைமுறை பற்றிய மாற்றத்தை மேற்கொண்டதாக, கோலி தெரிவித்தார்.
"2012ஆம் ஆண்டு ஐ.பி.எல் வரை, உடல் விடயம் தொடர்பாக நான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கவில்லை. காலையிலிருந்து இரவு வரை நான் என்ன உண்ண வேண்டும், எவ்வளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவுக்குப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் போன்ற உடற்றகுதியில் சிறிய விடயங்களில் நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை" என்றார்.
"அந்த ஐ.பி.எல் தொடரின் பின்னர், எனது உடல் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தேன். வாழ்க்கைமுறை மாற்றமொன்றை மேற்கொண்டேன். என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதற்கேற்றவாறு, எனது உடலின் புதிய பக்கத்தை அடைய விரும்பினேன். ஏனெனில், சராசரியானவனாக நான் இருக்க விரும்பவில்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago