Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே அணியின் தலைவர் பதவியிலிருந்து எல்டன் சிக்கும்புரா இராஜினாமாச் செய்ததையடுத்து, டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகிய மூன்று விதமான சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைவராக சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் ஹமில்டன் மசகட்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். தவிர உப அணித்தலைவராக புறச் சுழற்பந்துவீச்சாளர் கிரேமி கிறீமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக சிம்பாப்வே அணியின் உப அணித்தலைவராக இருந்து வரும் ஹமில்டன் மசகட்ஸா, வழமையான அணித்தலைவர்கள் காயம் அல்லது வேறு காரணங்களால் போட்டியில் பங்கேற்காத சமயங்களில் பன்னிரண்டு தடவைகள், சிம்பாப்வே அணியின் தலைவராக கடமையாற்றியுள்ளதுடன், சிம்பாப்வே உள்ளூர் அணியின் தலைவராக இருந்த அனுபவத்தையும் கொண்டுள்ளார்.
சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாமை காரணமாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிம்பாப்வே குழாமிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்த ஹமில்டன் மசகட்ஸா, பின்னர் ஷாஜாவில் இடம்பெற்ற தொடரிலேயே அணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 பிரதான தொடருக்கு தகுதி பெறுவதற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகளில் ஹொங் கொங், ஸ்கொட்லாண்ட், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் பலப்பரிட்சை நடாத்தவுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago