2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சமநிலையில் ஜுவென்டஸ் – லேஸியோ போட்டி

Shanmugan Murugavel   / 2025 மே 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.

ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை றன்டல் கொலோ முவானி பெற்றதோடு, லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை மதியாஸ் வெசினோ பெற்றிருந்தார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 77 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 74 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 68 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. லேஸியோவும் 64 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் ஜுவென்டஸுடனான போட்டி முடிவுகளின் அடிப்படையில் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. இதில் நாப்போலி, இன்டர், அத்லாண்டா ஆகியன ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X