2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சமநிலையில் லேஸியோ - பர்மா போட்டி

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற பர்மாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது.  

லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பெட்ரோ பெற்றதோடு, பர்மா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜேக்கப் ஒன்ட்ரேஜ்கா பெற்றிருந்தார்.  

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. 71 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 62 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .