Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சம்பியனானார்.
நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் கொக்கோ வன்டவகேயை வென்றே கரோலினா பிளிஸ்கோவா சம்பியனாகியிருந்தார்.
இப்போட்டியின் இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் வீழ்ந்து கையில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவ இடைவெளியொன்றை எடுத்துக் கொண்ட கொக்கோ வன்டவகேயுள்ள கரோலினா பிளிஸ்கோவாவின் சக்திவாய்ந்த தாக்குதல் ஆட்டத்தை தடுத்திருக்க முடியவில்லை.
15 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago