2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட ஜுவென்டஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவின் முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த ஜுவென்டஸ், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியின் வழமையான நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில், 3-3 என்ற மொத்த கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று 4-4 என மொத்த கோல் எண்ணிக்கையில் சமநிலையில் காணப்பட்டபோதும், எதிரணி மைதானத்தில் குறைவாக கோலைப் பெற்றமை காரணமாக தொடரிலிருந்து ஜுவென்டஸ் வெளியேற்றப்பட்டது.

ஜுவென்டஸ் சார்பாக, பெடெரிக்கோ சியெஸ்கா இரண்டு கோல்களையும், அட்ரியன் றபியொட் ஒரு கோலையும் பெற்றனர். போர்ட்டோ சார்பாக, சேர்ஜியோ ஒலிவெய்ரா இரண்டு கோல்களைப் பெற்றார்.

இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவுடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தி, 5-4 என்ற மொத்த கோல் கணக்கில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

டொட்டமுண்ட் சார்பாக, எர்லிங்க் ஹலான்ட் இரண்டு கோல்களையும், செவில்லா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் யூசெஃப் என்-நெஸ்ரியும் பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .