2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிற்றி, செல்சி, ஆர்சனல் வென்றன

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, செல்சி, ஆர்சனல், லிவர்பூல், பேர்ண்லி, எவெர்ற்றன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் மன்செஸ்டர் சிற்றி, 2-1 என்ற கோல் கணக்கில் செளதாம்டனை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். செளதாம்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒறியோல் றொமேயு பெற்றார்.

நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி, 1-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றியை வென்றது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனியோ ருடிகர் பெற்றார்.

ஆர்சனல், 5-0 என்ற கோல் கணக்கில் ஹட்டர்ஸ்பீல்ட் டெளணை வென்றது. ஆர்சனல் சார்பாக, ஒலிவர் ஜிரோட் இரண்டு கோல்களையும் அலெக்ஸான்ரே லகஸ்ரே, அலெக்ஸிஸ் சந்தேஸ், மெசுட் ஏஸில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

லிவர்பூல், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியை வென்றது. லிவர்பூல் சார்பாக மொஹமட் சாலா 2 கோல்களையும் சாடியோ மனே ஒரு கோலையும் பெற்றனர்.

பேர்ண்லி, 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.எப்.சி போர்ண்மெத்தை வென்றது. பேர்ண்லி சார்பாக, கிறிஸ் வூட், றொபி பிராடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஏ.எப்.சி போர்ண்மெத் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோஷுவா கிங் பெற்றார்.

எவெர்ற்றன், 4-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டை வென்றது. எவெர்ற்றன் சார்பாக வெய்ன் றூணி 3 கோல்களையும் அஷ்லி வில்லியம்ஸ் ஒரு கோலையும் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .