2025 ஜூலை 02, புதன்கிழமை

தகுதிகாண் போட்டிகளில் பிரேஸில், கொலம்பியா வென்றன

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 10 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், இன்று அதிகாலை நடைபெற்ற போட்டிகளில் பிரேஸில், கொலம்பியா ஆகியன வென்றுள்ளன.

பிரேஸிலில் நடைபெற்ற போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை பிரேஸில் வென்றிருந்தது. பிரேஸில் சார்பாக, றொபேர் பேர்மினோ இரண்டு கோல்களையும், மார்க்குய்ன்ஹாஸ், பிலிப் கோச்சினியோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதேவேளை, கொலம்பியாவில் நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுவேலாவை கொலம்பியா வென்றிருந்தது. கொலம்பியா சார்பாக, லூயிஸ் முரியெல் இரண்டு கோல்களையும் , டுவான் ஸபட்டா ஒரு கோலையும் பெற்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .