2025 ஜூன் 14, சனிக்கிழமை

தோல்வி முகத்திலிருந்து மீண்டு சம்பியனான அல்வரேஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 09 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் தோல்வி முகத்திலிருந்து மீண்டு வந்து உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரேஸ் சம்பியனாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற முதல்நிலை வீரரான ஜனிக் சின்னருடனான இறுதிப் போட்டியின் ஒரு கட்டத்தில் 4-6, 6-7 (4-7), 6-4, 3-5 என தோல்வி முகத்தில் காணப்பட்ட ஸ்பெய்னின் அல்வரேஸ் அந்த செட்டை 7-6 (7-3) எனக் கைப்பற்றியதுடன், இறுதி செட்டை 7-6 (10-2) என்ற ரீதியில் வென்றே சம்பியனானார்.

தனது அரையிறுதிப் போட்டியில் தற்போதைய ஆறாம் நிலை வீரரான லொரென்ஸோ முஸெட்டியை அல்கரெஸ் எதிர்கொண்டு 4-6, 7-6 (7-3), 6-0. 2-0 என முன்னிலையில் இருக்கின்றபோது இத்தாலியின் முஸெட்டி போட்டியிலிருந்து விலகிய நிலையில் இறுதிப் போட்டிக்கு அல்கரெஸ் தகுதி பெற்றார்.

மறுபக்கமாக தற்போதைய ஐந்தாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சை 6-4, 7-5, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வென்று இத்தாலியின் சின்னர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .