Shanmugan Murugavel / 2025 மே 07 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.
இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான அரையிறுதிப் போட்டியில் 6-7 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்றே பார்சிலோனா வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய பார்சிலோனா, இன்டர் மிலனின் மைதானத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் பெறப்பட்ட கோலால் தோற்றது. வழமையான போட்டி முடிவின் இறுதி நிமிடங்களிலேயே கோலெண்ணிக்கையையும் இன்டர் மிலன் சமப்படுத்தியிருந்தது.
பார்சிலோனா சார்பாக எரிக் கர்சியா, டனி ஒல்மோ, றபீனியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், ஹகன் கல்ஹனொக்லு, பிரான்ஸெஸ்கோ அக்கர்பி, டேவிடே பிறெட்டசி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago