2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மாநாட்டு லீக்: சம்பியனானது செல்சி

Shanmugan Murugavel   / 2025 மே 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் மாநாட்டு லீக் தொடரில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சம்பியனானது.

போலந்தில் வியாழக்கிழமை (29) அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் பெட்டிஸுடனான இறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றே செல்சி சம்பியனானது.

செல்சி சார்பாக என்ஸோ பெர்ணாண்டஸ், நிக்கொலஸ் ஜக்சன், ஜடோன் சஞ்சோ, மொய்ஸஸ் கைசெடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெட்டிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அப்டெல் எஸல்ஸ்ஸூலி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X