Editorial / 2018 பெப்ரவரி 01 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரில், ஏ.சி மிலனின் மைதானத்தில் நேற்று முன்தினம இடம்பெற்ற ஏ.சி மிலன், லேஸியோ அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியில் 75ஆவது நிமிடத்தில், ஏ.சி மிலனின் முன்கள வீரர் பற்ரிக் குர்துன்னே தலையால் முட்டிய பந்தை லேஸியோவின் கோல் காப்பாளர் தோமஸ் ஸ்ரகோஷா அருமையாகத் தடுத்தமையைத் தொடர்ந்து, ஏ.சி மிலனின் மத்தியகள ஹஷன் சொலங்கு இலகுவாக கோல் பெறும் வாய்ப்பிருந்தபோதும், கோல் காப்பாளர் இல்லாத நிலையில், கோல் கம்பத்துக்கு வெளியே பந்தைச் செலுத்தியிருந்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago