2025 ஜூன் 14, சனிக்கிழமை

முதல்நிலை வீராங்கனையை வீழ்த்தி சம்பியனான கெளஃப்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 08 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப் சம்பியனானார்.

சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான அர்யானா சபலெங்காவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் கெளஃப், 6-5 (5-7) என டைபிரேக்கரில் முதல் செட்டை இழந்தபோதும் 6-2, 6-4 என அடுத்த இரண்டு செட்களையும் வென்று சம்பியனானார்.

தனது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் லொய்ஸ் பொய்ஸனை எதிர்கொண்ட கெளஃப், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், ஐந்தாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை 7-6 (7-1), 4-6, 6-0 என்ற செட் கணக்கில் தனது அரையிறுதிப் போட்டியில் வென்று பெலாரஸின் சபலெங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .