Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் றோகித் ஷர்மாவுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். ஆசியக் கிண்ணப் போட்டிகளில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றமை தொடர்பிலேயே அவர், இந்தப் பாராட்டை வெளிப்படுத்தினார்.
மெதுவாக விளையாடத் தொடங்கிய றோகித் ஷர்மா, அதன் பின்னர் அதிரடியாக விளையாடி, 55 பந்துகளில் 83 ஓட்டங்களைக் குவித்தார். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து, 3 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களுடன் தடுமாறிய இந்திய அணிக்கு, றோகித் ஷர்மாவின் துடுப்பாட்டப் பாணியே தேவைப்பட்டிருந்ததாக, டோணி தெரிவித்தார். பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தைப் பயன்படுத்திய றோகித், நுட்பமாகத் துடுப்பெடுத்தாடியதாகவும், டோணி குறிப்பிட்டார்.
றோகித் தவிர, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய றார்டிக் பாண்டியா, சிறப்பாகப் பந்துவீசிய ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கும், தனது பாராட்டுகளை, டோணி வெளியிட்டார்.
நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற இப்போட்டியில் இந்திய அணி, றோகித் ஷர்மாவின் 83 (55), ஹார்டிக் பாண்டியாவின் 31 (18) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி சார்பாக சபிர் ரஹ்மான் 44 (32) ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஆஷிஷ் நெஹ்ராவின் 3 விக்கெட்டுகளின் காரணமாக அவ்வணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago