2025 ஜூன் 14, சனிக்கிழமை

ஸவ்ரேவ்வை வென்று அரையிறுதியில் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் ஆறாம்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதி பெற்றுள்ளார்.

புதன்கிழமை (04) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 4-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதேவேளை தனது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸின் லொய்ஸ் பொய்ஸனை எதிர்கொண்ட ஆறாம் நிலை வீராங்கனையான மிரா அன்ட்றீவா 6-8 (6-8), 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் தனது காலிறுதிப் போட்டியில் எட்டாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸை எதிர்கொண்ட இரண்டாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப், 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .