Shanmugan Murugavel / 2025 ஜூன் 05 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் ஆறாம்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதி பெற்றுள்ளார்.
புதன்கிழமை (04) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 4-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதேவேளை தனது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸின் லொய்ஸ் பொய்ஸனை எதிர்கொண்ட ஆறாம் நிலை வீராங்கனையான மிரா அன்ட்றீவா 6-8 (6-8), 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தனது காலிறுதிப் போட்டியில் எட்டாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸை எதிர்கொண்ட இரண்டாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப், 6-7 (6-8), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
28 Dec 2025