Shanmugan Murugavel / 2025 ஜூன் 10 , பி.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் போர்த்துக்கல் சம்பியனானகியுள்ளது.
ஜேர்மனியில் திங்கட்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற ஸ்பெய்னுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே இரண்டாவது தடவையாக போர்த்துக்கல் சம்பியனாகியுள்ளது.
போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்ததுடன், மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படாத நிலையிலேயே போட்டி பெனால்டிக்குச் சென்றிருந்தது.
போர்த்துக்கல் சார்பாக நுனோ மென்டிஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்பெய்ன் சார்பாக மார்டின் ஸுபிமென்டி, மிகேல் ஒயர்ஸ்பல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
பெனால்டியில் போர்த்துக்கல்லின் கொன்கலோ றாமோஸ், வித்தின்ஹா, ப்ரூனோ பெர்ணாண்டஸ், நுனோ மென்டிஸ், ருபென் நெவெஸ் ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் செலுத்தியிருந்தனர். ஸ்பெய்னின் மிகேல் மெரினோ, அலெக்ஸ் பயெனா, இஸ்கோ ஆகியோர் தமதுதைகளை கோல் கம்பத்துக்குள் தடுத்த நிலையில் அல்வரோ மொராட்டாவின் உதையை போர்த்துக்கல்லின் கோல் காப்பாளர் டியகோ கொஸ்டா தடுக்க 5-3 என்ற ரீதியில் பெனால்டியில் போர்த்துக்கல் வென்றது.
5 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago