2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 40 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச உரம் விநியோகம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                  (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள 40 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இலவச உரம் விநியோகிக்கும் நடவக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாங்கன் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள 17 கமநல கேந்திர நிலையங்களினூடாகவும் இவ்விநியோகம் இடம்பெற்றுவருவதாகவும்  அவர்மேலும் தெரிவித்தார்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இம்மாதம் நடுப்பகுதியில் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகுமெனவும் மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .