2025 மே 08, வியாழக்கிழமை

இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்,வி.சுகிர்தகுமார்

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்களுக்கம் விசேட தேவையுடையோருக்கும் இலவச உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் உடல் வலுக்குறைந்த நடக்க முடியாத முதியவர்கள் இருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வண்டிகளும் செவிப்புலன் குறைந்த யுவதியொருவருக்கு கேள்திறனை அதிகரிக்கும் சாதனமும்  வயோதிபப் பெண்ணொருவருக்கு மூக்குக் கண்ணாடியும் விசேட தேவையுடைய ஒருவருக்கு சக்கர நாற்காலியொன்றும் பிரதேச செயலாளரால் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

வழங்கப்பட்ட உபகரணங்களை செயற்திறனோடு பாவிக்கும் முறைகள் தொடர்பாகப் பிரதேச செயலாளராலும் சமுக சேவைகள் பிரிவு உத்தியோகத்தர்களாலும் அவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 இந்நிகழ்வில் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.சி.எம்.றக்கீப் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பி.சண்முகநாதன்இ ஆர்.சிவானந்தம் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X