Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்களையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களையும் தட்டிக்கழிக்க முனைவதன் விளைவாகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளரும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளருமான ப்ரெடி கமகே மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஊடக சுதந்திரத்துக்;கான செயற்பாட்டுக்குழுவின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான ப்ரெடி கமகே மீது நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
சிலர், ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சம்பவங்களை வெளிநாட்டிற்கு செல்வதற்காக ஊடகவியலாளர்கள் வேண்டுமென்றே அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றனர் என்று கூறுவதுடன், ஊடகவியலாளர்களையும் அவர்களுக்கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களையும் தட்டிக்கழிக்க முனைவதன் விளைவாகவே இந்த நாட்டில் தொடர்ந்தும் ஊடகத்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது.
எனவே, இது போன்ற சுயநலமிக்க கருத்துக்களை தவிர்த்து ஊடகவியலாளன் ஒருவனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அதற்கு பக்கபலமாக நிற்பதே ஊடக தர்மமாகும்.
அந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்துவரும் பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களில் சகோதரர் ப்ரெடி கமகேயும் முக்கியமானவர். இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஊடகத்துறை ஊடாக பெரும்பங்காற்றிய ப்ரெடி கமகே மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தக்குதலை தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அரசாங்கம் கண்டுபிடித்து தண்டனை வழங்கி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் ஊடகவியலாளர்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்' என்றார்.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago