Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
தங்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,400 க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதுடன், அவர்கள் அனைவரையும் அரசாங்க சேவையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கையை மத்திய மற்றும் மாகாண அமைச்சுகள் மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்குப் பின்னர் பட்டம் பெற்றவர்களுக்கு இதுவரையில் எந்தவித நியமனங்களும் வழங்கப்படவில்லை. அவர்களின் நியமனங்கள் தொடர்பில் எதுவும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் 2,700 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதிமொழி வழங்கியிருந்தார். இருப்பினும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தாம் தொடர்ந்து அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தமது நியாயமான கோரிக்கைiயை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உப தலைவர் ரி.கிஷான் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது வயதெல்லையை அதிகரிக்க வேண்டும். ஏனெனில், 35 வயதைத் தாண்டிய 50 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையின்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago