2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

Sudharshini   / 2016 ஜூன் 01 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள 500 வறிய மாணவர்களுக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பட்டதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் அக்கீல் அர்ஸாத் தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்ற இந்நிகழ்வொன்றின்  போது, முதலாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 500 வறிய மாணவர்கள் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதேவேளை, அறபா வித்தியாலய மாணவர்களின் நலன்புரி வேலைகளுக்காக இருபத்தையாயிரம் ரூபாய் நன்கொடை, ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பினால் பாடசாலை நிருவாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ், ஏறாவூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் பணிப்பாளர் அக்கீல் அர்ஸாத்  உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X