2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2011 மே 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மூக்கர்ரகல் அம்புஸ்குடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை சோதனையிட்ட போதே கிறனேட் 10, சயனைட் குப்பி 02, டெட்டனேட்டர் 30, ஜொனி பட் 01, ஜொனி பட் பீஸ் 02, ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

இப்பொருட்களின் ஜொனி பட்டில் JONY SPECIAL – 95 MADE IN TAMIL EELAM” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை யுத்தகாலத்தில் விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .