2026 மே 14, வியாழக்கிழமை

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 26 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான பிளாஸ்டிக் கதிரைகளை பிரதி அமைச்சர் பசிர் சேகுதாவூத் வழங்கியுள்ளார்.

2011ம் ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதியில் இருந்து இந்த அன்பளிப்பை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டின் கமநெகும திட்டத்தில் பிரதி அமைச்சர் பசிர் சேகுதாவூத்தின் முயற்சியால் ஏறாவூர் பிரதேச சுகாதார அபிவிருத்திக்காக 4.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு 3 மில்லியன் ரூபா பெறுமதியில் மீராகேணியில் கிராமோதய சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மீதியாகவுள்ள 1.4 மில்லியன் ரூபாவுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உட்கட்டமைப்பு தேவைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .