2026 மே 06, புதன்கிழமை

மட்டு. மீள்குடியேற்றப் பகுதிகளில் அமோக விளைச்சலைத் தந்துள்ள நிலக்கடலை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன்  மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை செய்கை அமோக விளைச்சலைத் தந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் நிறைவேற்று
அதிகாரி தெரிவித்தார்
 
முதன்முறையாக இம்மாவட்டத்தில் 1,900 ஏக்கர் நிலப்பரப்பில் சேனைப் பயிர்ச்செய்கையான நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மிகக்குறைவான ஏக்கரிலேயே நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டது. வாகரை, செங்கலடி, கரடியனாறு,  கிரான், வவுணதீவு உள்ளிட்ட பல  மீள்குடியேற்றப்  பகுதிகளில்  நிலக்கடலை பெருமளவில் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலக்கடலை செய்கைக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செய்கையாளர்களுக்கு உரம், விதைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .