2026 மே 06, புதன்கிழமை

மண்டூர் வாவியிலிருந்து சட்டவிரோத உபகரணங்கள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, மண்டூர் வாவியில் சட்டவிரோத உபகரணங்கள் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜின் உத்தரவுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போதே இந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவர்களிடம் இருந்து பெருமளவு தடைசெய்யப்பட்ட வலைகள்,மீன்பிடி வள்ளங்கள்,மீன்பிடி உபகரணங்கள் உட்பட சுமார் 06 இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள பரிசோதகர் ஈ.ராஜ்குமார் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடற்தொழில் பரிசோதகர்களான கணேசமூர்த்தி, நிப்ராஸ் முகமட், நஜாத், வி.மனோகரன், அமிர்தலிங்கம் ஆகியோர் கொண்ட குழு ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .