2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 06 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெறவுள்ள இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளின் முன்னேற்றம் மற்றும் மீளாய்வு தொடர்பாகவும் நிதியொதுக்கீடுகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X