2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அனர்த்த முன்னேற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


வடகீழ் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையிலான அனர்த்த முன்னேற்பாடு தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை எதிர்பார்க்கப்படும் வடகீழ் பருவ மழைக்காலத்தில் மழை வெள்ளம், சுழல்காற்று, சூறாவளி, உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையாகும். இந்த நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.இநெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், இராணுவ, பொலிஸ், விமானப்படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .