Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்th>fpU];zh
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள் உள்வாங்கி அரச நியமனங்களை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பேரணியாக மட்டக்களப்பு கச்சேரிவரை சென்றனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இவர்கள் கையளித்துள்ளனர்.
அண்மையில் கிழக்கு மாகாணசபையாலும் கல்வித் திணைக்களத்தாலும் முன்பள்ளி ஆசிரியர்களை உள்வாங்கி அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதாக தெரிவித்தபோதிலும், அது மேற்கொள்ளப்படாமையால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களிலும் 546 முன்பள்ளிகள் உள்ளதுடன், மட்டக்களப்பில் 107 முன்பள்ளி ஆசிரியர்களும் கல்குடாவில் 324 முன்பள்ளி ஆசிரியர்களும் பட்டிருப்பில் 259 முன்பள்ளி ஆசிரியர்களும் மட்டக்களப்பு மத்தியில் 300 முன்பள்ளி ஆசிரியர்களும் மட்டக்களப்பு மேற்கில் 418 முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். 18,828 முன்பள்ளி மாணவர்களும் உள்ளதாக கிழக்கு மாகாண முன்பள்ளி சிறுவர்நேயப் பாடசாலைகளின் பணிப்பாளர் பொன். செல்வநாயகம் தெரிவித்தார்.
'ஆரம்பக்கல்விக்கு அடித்தளம் இடும் எங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவு போதுமா?', 'முன்பள்ளி ஆசிரியர்கள் என்றால் ஏளனமா?', 'முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவைக்குள் உள்வாங்குங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago